Thursday, February 12, 2015

தெதுறுஓயாவில் குதித்த மாணவனின் சடலமாக மீட்பு

தெதுறுஓயா நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவனின் சடலத்தை கடற்படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.
நேற்று தெதுறுஓயா நீர்த்தேக்கத்தில் மாணவன் ஒருவனும் மாணவி ஒருவரும் குதித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகலையடுத்தே பொலிஸாரும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் குறித்த மாணவின் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments