- அஸ்ரப் ஏ சமத் – ஏறாவூர் நகர சபைத் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுபப்pணருமான அலி சாஹீர் மௌலானா, காத்தாண்குடி அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பிணர் சிப்லி பாருக் ஆகியோர் இன்று ஞயிற்றுக்கிழமை மு.பகல் 11.00 மணிக்கு முஸ்லீம் காங்கிரசில் இணைந்து கொள்கின்றனர்.
இந் நிகழ்வு கொழும்பு முஸ்லீம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்சலாமில் ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சரும் ரவுப் ஹக்கீம், கட்சியின் செயலாளரும் இராஜங்க அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி புதிய கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டும் கலந்து கொள்வார்கள்.
