Thursday, February 26, 2015

இன்று முக்கிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்த உள்ளார் முன்னாள் பொலிஸ் அதிகாரி

தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தில் காரணமாக அவுஸ்திரேலியா சென்று வாழ்ந்து வந்த முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி இன்று நாடு திரும்பி முக்கிய தகவல் ஒன்றினை வெளிப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தான் கடமையில் இருந்த போது தனக்கு அச்றுத்தல் விடுக்கப்படுவதாகத் தெரிவித்து அவர் வெளிநாடு சென்று வாழ்ந்து வந்தார். தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று அவர் நாடு திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வரும் அவர் முக்கிய விடயம் ஒன்றினை வெளிப்படுத்தப் போவதாகவும், இதற்காக இன்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disqus Comments