Saturday, March 7, 2015

2020ம் ஆண்டளவில் கேஸ், எரிபொருள் இறக்குமதி நிறுத்தப்படும்! -சம்பிக்க


2020ம் ஆண்டளவில் வௌிநாடுகளில் இருந்து கேஸ் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 


இதுவரை மன்னாரில் எண்ணெய் வளமுள்ள இரண்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 



புத்தளம் - ஆணமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
Disqus Comments