மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, இலங்கை மின்சார சபை, மின் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க இரண்டு நாட்கள் வரை தேவைப்படும் எனவும், இதனால் இலங்கையின் மின் கட்டமைப்புக்கு 700 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் எனவும், மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.சி.விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் அடிக்கடி நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
