Wednesday, October 12, 2016

மூதூர்: வீடொன்றில் தீ - 25 வயதான பெண் மற்றும் 32 வயதான ஆண் பலி.


மூதூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் உயிரிழந்தவர் 25 வயதான பெண் மற்றும் 32 வயதான ஆண் ஒருவரும் எனத் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, உயிரிழந்த இருவருக்கும் இடையில் தவறான தொடர்பிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதற்கமைய இந்த தீக்கு காரணம் என்ன என்பது தொடர்பிலான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Disqus Comments