பஸ்களில் வியாபாரங்களில் ஈடுபடுவதைத் தடை செய்ய உடனடியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைத் தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்
பஸ்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றைக் கருத்திற்கொள்ளாது வியாபாரங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.