Sunday, June 3, 2012

2012 டிசம்பரில் O/L பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு

டிசம்பர் மாதம் க பொ த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் பரிட்சாத்திகளிடம் இருந்து பரிட்சைகள் திணைக்களத்தால் கோரப் பட்டுள்ளது.

எதிர்வரும் 2012 டிசம்பரில் O/L பரிட்சைக்கு பரிட்சைக்கு தோற்ற உள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட  பரிட்சாத்திகள் அனைவரும் இம்மாதம்(ஜூன்) 30 திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை பாடசாலையில் இருந்து விலகியவர்கள் மாத்திரமே தனிப்பட்ட   பாடசாலையை விட்டு விலகியவர்கள் மட்டுமே தனிப்பட்ட பரிசார்த்திகளாக விண்ணப்பிக்க முடியும் எனவும் அவ்வாறு பாடசாலையில் கற்றுக் கொண்டு தனிப்பட்ட பரிசார்த்திகளாக விண்ணப்பிப்பவர்கள் பரிட்சை தடைக்கு உட்படுவார்கள் பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பரீட்சைகளுக்கு தோற்றும் தனிப்பட்ட பரிசார்த்திகள் தமது நிரந்தர வதிவிடத்திற்கு அருகிலுள்ள மத்திய நிலையத்தை தெரிவு செய்யவேண்டும் என்பதோடு பிரதேச கிராம சேவகரின் உறுதிபடுத்தல் ஒப்பந்தத்துடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கேட்டுள்ளது.

பரிட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை ஒத்ததாக 28 x 21 செ மி அளவான  தாளில் விண்ணப்பத்தை தயாரித்து அதனை பூர்த்தி செய்து பரிட்சை ஆணையாளர் நாயகம், பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை, இலங்கை பரிட்சைகள் திணைக்களம், தபால் பெட்டி இல - 1503, கொழுப்பு என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை பரிட்சாத்திகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை விண்ணப்ப படிவங்கள் பாடசாலைகள் உடனடியாக பரிட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. 



 
Disqus Comments