Friday, May 10, 2013

அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு காரணம் ஆண்மை குறைபாடுகள் !!!

(JM)தற்போது எல்லா நாடுகளிலும் விவாகரத்து அதிகரித்து வருகிறது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும் ஆண்மை குறைவு முக்கிய பிரச்சனையாக கூறப்படுகிறது. தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டெல்லியில்  நடத்திய ஆய்வில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே இளைஞர்கள் கையில் பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவை அளவுக்கு அதிகமாக புழங்குவதால் குடி, கூத்து என்று சென்று உண்மையான செக்ஸ் என்று வரும்போது அவர்களுக்கு தாம்பத்திய வாழ்வு நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். இவையெல்லாம் அவர்களது தாம்பத்திய  மின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் தாம்பத்தியம்  பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.
Disqus Comments