Saturday, July 20, 2013

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு ஓகஸ்ட் 7இல் சம்பளம்

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி சம்பளம் வழங்கவேண்டுமென திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதால் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கமைய தேவையான நிதி ஒதுக்கீடு சகல அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Disqus Comments