(NV) தம்புள்ளை பள்ளிவாசலைச் சுற்றியுள்ள
கடைகளையும் குடியிருப்புகளையும் அங்கிருந்து அகற்றுவதற்கு 7 நாட்கள்
காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நகர, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால்
இன்று வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலே இந்த காலக்கெடு
விதிக்கப்பட்டுள்ளதாக கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த 7 நாட்களுக்குள் அவர்கள்
அங்கிருந்து வெளியேறாவிட்டால் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும்
அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.