(Reporter) தோ்தல் காலம் என்றாலே மக்களை ஏமாற்றும் செயல்கள் அரங்கேறுவது கண்கூடு. அந்த வகையில் ஏமாற்றும் செயல்கள் புத்தளம் மதுரங்குளி பகுதிகளில் அரங்கேறி வருவதாக அறியக்கிடக்கின்றது. அதன் ஒரு கட்டமாக நேற்று புழுதிவயல் பாடசாலையில் இடம் மற்றும் ஏனைய அயல் கிராமங்களிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட தென்னங்கன்று பகிர்ந்தளிப்பை கூறப்படுகின்றது.
மஹிந்த சிந்தனையின்க கீழ் கபுறுக வேலைத்திட்டத்தின் மக்களுக்கான தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு சுய தொழில் வழிகாட்டுதலாகும். அந்த வழிகாட்டுதலை தான் ஏற்பாடு செய்வதாக கூறும் நோக்கில் எதிர்வரும் தோ்தலில் வேட்பாளராக களம் இறங்க இருக்கும் சிலா் தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கும் இடங்களுக்கு தென்னங் சிலருக்கு தென்னங்கன்றுகளை வழங்கி விட்டு புகைப்படங்களையும் எடுத்துச் செல்வதாகவும் அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற ஏமாற்றும் செயல்கள் 2014ம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அரசால் நடாத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களையும் தங்களது ஓட்டு வங்கியை நிரப்ப பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.