(PO)முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
புளுதிவயல் பிரதேச மக்களுக்கான பொது விளையாட்டு மைதானமொன்றிற்காக 7 ஏக்கர்
காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்
என்.டி.எம். தாஹிர் தெரிவித்தார்.
புளுதிவயல் பிரதேச மக்களுடனான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்மா பள்ளியில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த பிரதேச இளைஞர்களினதும், பாடசாலை
மாணவர்களினதும் திறமைகளினை வளர்க்க இப் பிரதேசத்தில் மைதானம் ஒன்று
காணப்படாமை பெரும் தடையாக காணப்பட்டது. தற்போது மைதானதிற்கான காணி கடந்த 30.07.2013 நடமாடும் சேவை நடைபெற்ற தினத்தில் அளிக்கப்ட்ட வாக்குறுதிக்கு ஏற்ப முந்தல்
பிரதேச செயலாளரினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்
எம்.எச்.எம். முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க தான் மேற்கொண்ட
முயற்சியின் பயனாக இக்காணி கிடைக்கப்பெற்றதாகவும், குறித்த மைதானத்தின்
அபிவிருத்தி பணிகளுக்கு தனது நிதியிலிருந்து முதற்கட்டமாக 5 இலட்சம் ரூபா
ஒதுக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் புளுதிவயல் ஜூம்மா பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.