காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆபள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி
முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகியவற்றில் கடந்த 1990ஆம் ஆண்டு
8ஆம் மாதம் 3ஆம் திகதி தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 பேர் படுகொலை
செய்யப்பட்ட தினம் ஹுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு அன்று காலை படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி முதலாம்
குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசலில் குர்ஆன் ஓதி துஆப்பிரார்த்தனையும்
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில்
ஷுஹதாக்கள் குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்களும்
விநியோகிக்கப்படவுள்ளது.