புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30
மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை உயர் அதிகாரிகள் இருவர்
மரணமடைந்துள்ளனர்.
பூநகரியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த கடற்படையினரின் காரும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொமாண்டர் ஜானக்க பிரியந்த, லெப்டினட் கொமாண்டர் சரித் கலுதந்திரி ஆகிய கடற்படை உயர் அதிகாரிகளே இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் ஆவர்.
சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பூநகரியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த கடற்படையினரின் காரும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொமாண்டர் ஜானக்க பிரியந்த, லெப்டினட் கொமாண்டர் சரித் கலுதந்திரி ஆகிய கடற்படை உயர் அதிகாரிகளே இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் ஆவர்.
சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்