Saturday, July 20, 2013

ஆசிரியையை மாணவர்கள் முன் மண்டியிட வைத்த ஆளும் கட்சி உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு !

ஆசிரியை ஒருவரை மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் மண்டியிட வைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அந்த கட்சி வழங்கியுள்ளது.

புத்தளம் மாவட்டம் தம்புத்தேகம பாடசாலை ஒன்றின் ஆசிரியை மண்டியிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான சரத் குமார என்பவர் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட அனுமதி வழங்குவது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் வேட்புமனுக்களை தெரிவு செய்யும் குழுவின் உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசி,

நேர்முக பரீட்சைக்கு சமூகமளித்திருந்த வேளை அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், விரிவாக விசாரித்த பிறகு, அவர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் என்று தீர்மானிக்கப்பட்டது.

எனினும், இந்த முடிவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய வேட்புமனு குழுவிற்கு அறிவித்த பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
Disqus Comments