டெஹ்ரான்: இஸ்ரேலும், ஏகாதிபத்திய சக்திகளும் முஸ்லிம் உலகிற்கு
எக்காலக்கட்டத்திலும் எதிரிகள் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்
தெரிவித்துள்ளார். ஈரானில் முஸ்லிம் நாடுகளின் தூதர்களுக்கு நடத்தப்பட்ட
ரமலான் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் நஜாத். மேலும்
அவர் கூறியது : நமது நாடுகள் அழிவதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.
ஸ்திரத்தன்மையற்ற, வளர்ச்சியற்ற சூழலை உருவாக்குவதுதான் அவர்களின் நோக்கம்.பெரும் வல்லரசு நாடுகள் பிராந்தியத்தை அவர்களின் கீழ் இயங்கும் பிரதேசமாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். நமது சொத்துக்களை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றார்கள்.மேற்கத்தியர்களின் பொருளாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இனி நமது பொருளாதார கட்டமைப்பையும் சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.சொந்த நாட்டு மக்களின் அந்தஸ்தையும், உரிமையையும் ஈரான் உயர்த்திப் பிடிக்கிறது என்று கூறிய நஜாத், தனது ஆட்சிக் காலத்தில் அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்