Thursday, September 5, 2013

சவுதி பொது மன்னிப்பு காலம் நவம்பர் 4ம் திகதியுடன் நிறைவு

சவுதி அரேபியா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நவம்பர் 4ம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

சட்டவிரோதமாக தங்கியிருந்து நவம்பர் 4ம் திகதிக்குப் பின் கைது செய்யப்படுவோருக்கு 300,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments