ஐந்து அல்லது அதற்கு அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு சிங்களக் குடும்பத்துக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க 'பஸ்வி தரு திரி' நிதிச் சங்கம் முன்வந்துள்ளது.
நாட்டிலுள்ள சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு குடும்பத்திலுள்ள பிள்ளைகள் 17 வயதை அடையும் வரையும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
பிரான்சிலுள்ள பரவாஹர சந்திர ரத்ன தேதரின் தலைமையில் இயங்கும் நன்கொடை நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 9 ஆம் திகதி கல்கிஸ்ஸை பௌத்த விகாரையில் வைத்து ஆறு பிள்ளைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக சிங்கள செய்தி நிறுவனமொன்று குறிப்பிட்டுள்ளது.