Friday, September 20, 2013

வாக்­காளர் அட்டை கிடைக்­கா­த­வர்­களும் மாகாண சபைத்தேர்­தலில் வாக்­க­ளிக்­கலாம் - தோ்தல் ஆணையாளா்


வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளுக்­காக நாளை சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள தேர்தல் வாக்­க­ளிப்பில் வாக்­காளர் அட்­டைகள் கிடைக்­கப்­பெ­றா­த­வர்­களும் வாக்­க­ளிக்க முடியும் என்று தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.
வாக்­காளர் அட்­டைகள் கிடைக்­கா­த­வர்கள் சனிக்­கி­ழமை காலை தமக்கு அருகில் உள்ள வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு சென்று ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­தி­விட்டு வாக்­க­ளிக்க முடியும் என்றும் செய­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.
எவ்­வா­றெ­னினும் வாக்­காளர் இடாப்பில் பெயர் இடம்­பெற்­றி­ருந்தால் மட்­டுமே இவ்­வாறு வாக்­க­ளிக்க முடியும் என்று தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார். நாளை சனிக்­கி­ழமை காலை ஏழு மணி­முதல் மாலை நான்கு மணி­வரை வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments