Thursday, September 5, 2013

எய்ட்ஸ் நோயாளிகளில் முதலிடம் வகிக்கும் பிலிப்பைன்ஸ்!

மணிலா: எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பிலிப்பைன்ஸில் அதிகரித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பிலிப்பைன்ஸில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 449 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1984ம் ஆண்டு முதன் முதலாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறையில், கடந்த மாதத்தில்  கிடைத்த எண்ணிக்கைத் தான் இதுவரையில் பெறப்பட்ட எண்ணிக்கையில் அதிகமானதாகும் என்று கூறியுள்ளது.
மேலும், தற்போது கண்டு பிடிக்கப்பட்டவர்களில் 96 சதவிகிதம் பேர் ஆண்கள் என்றும், குறிப்பாக 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் தான் அதிக அளவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 62 சதவிகிதம் அதிகமாகும்.
Disqus Comments