Sunday, September 8, 2013

அஞ்சல் வாக்கு பதிவுகள் நாளையும், நாளை மறுதி்னமும்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான் அஞ்சல் வாக்கு பதிவுகள் இந்த மாதம் 9ம் மற்றும் 10 திகதிகளில் அதாவது நாளையும், நாளை மறுதி்னமும் நடைபெறவுள்ளன. இந்த வாக்கு பதிவுகள் இடம்பெறுகின்ற அரச நிறுவனங்கள் உள்ள பகதிகளில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட்  வழங்கினார். இந்த வாக்களிப்பின் போது வாக்காளர்களின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும் எனவும், இதனால் வாக்காளர்கள் அச்சமின்றி தங்களின் வாக்குகளை பதிவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

புத்தளம் மாவட்ட தபால் வாக்குகள் விபரம்

புத்தளம் தோ்தல் தொகுதி                 630 வாக்குகள்
ஆனமடுவ தோ்தல் தொகுதி            2867 வாக்குகள்
சிலாபம் தோ்தல் தொகுதி                 1469 வாக்குகள்
நாத்தாண்டிய தோ்தல் தொகுதி      777 வாக்குகள்
வென்னப்புவ தோ்தல் தொகுதி       539 வாக்குகள்

Disqus Comments