Tuesday, October 15, 2013

பெரு நாட்டில் பஸ் கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி! (வீடியோ)

பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 52 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் சான்டா தெரசா மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மலை பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்றிற்கு வழி விடுவதற்காக, ஒதுங்கியபோது மலை சரிவில் உருண்டு சவுபிமாயோ நதியில் விழுந்தது பேருந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில்14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பேருந்தில் இருந்த பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்
விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால் மீட்ப்புப் பணியில் தாமதம் ஏற்படடது.


Disqus Comments