Tuesday, October 15, 2013

தானாகவே பொலிஸில் சரணடைந்தார் மங்கள சமரவீர

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மாத்தறை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவானினால் நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Disqus Comments