Tuesday, October 22, 2013

குடிப்பழக்கத்தினால் புது மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன்!

குடிப்பழக்கம், குடும்பத் தகராறில் ஆரம்பித்து கட்டிய மனைவியை கொலை செய்ய வைத்த சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.

அரியலூர் ஜெயங்கொண்டம் ஊரைச் சார்ந்தவர்கள் அசோக் (வயது 28) மற்றும் அவரது மனைவி கவிதா (வயது 24). இருவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் இருவரும் திருப்பூர் ஜவஹர் நகரில் வாடகை வீட்டில் வசித்து கொண்டு, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

அகோக்குக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது கவிதாவிற்கு தெரிய வந்த பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டாம். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அகோச் குடித்து விட்டு வந்தவுடன், கோபத்தில் கணவனை கவிதா திட்டியிருக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, அங்கிருந்து தப்பி விட்டான்.

இது சம்பந்தமாக திருப்பூர் ரூரல் காவலர்கள் வழக்கு பதிவு செய்து, கொலையாளி அசோக்கை தேடி வந்தனர்.  ஆனால் அசோக், அரியலூர் மாவட்டம் கூவகம் வி.ஏ.ஓ மாரியம்மாளிடம் சரணடைந்தார். திருப்பூர் ரூரல் காவலர்கள், அசோக்கை கைது செய்து, நீதிமன்ற ஆணைப்படி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Disqus Comments