Thursday, October 31, 2013

வெள்ள நீரில் மூழ்கியது அக்குறணை நகரம்

அதிக மழையை அடுத்து கண்டி அக்குறணை நகரம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக ஏ_9 வீதியின் மாத்தளை வரையான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அக்குறணை நகரத்தில் சுமார் ஏழு அடிகள் உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள், உக்குவளை, வத்தேகம, கட்டுகஸ்தோட்டை ஊடாக கண்டியை சென்றடைய முடியும் என பொலிஸார் கூறுகின்றனர்.

கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதியூடாக பயணிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Disqus Comments