(VD)எக்காரணம் கொண்டும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது என
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்
ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று
வௌ்ளிக்கிழமை பாராளுமன்றக் கட்டடிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில்
இடம்பெற்றது. இக் கலந்தரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய
ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபர். இராணுவத் தளபதி, மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போதே ஜனாதிபதி மேற்படி
வாக்குறுதியை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்
மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலின்போது தம்புள்ளையில் வாழும் 42 குடும்பங்களுக்கு
தம்புள்ளை நகரில் வேறு இடத்தில் வீடுகள் வழங்கவும் இந்து கோயிலுக்குப்
பதிலாக தம்புள்ளை நகரப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் அதனை
அமைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ளையில் உள்ள பள்ளிவாசலின் ஒரு பகுதி வீதி அபிவிருத்திப்
பணிகளுக்குள் உள்ளடங்குவதால் அதனை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை
நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனித்த போதிலும் பள்ளிவாசலை அகற்றுவதில்லை
என ஜனாதிபதி அறிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது என ஏலவே ஜனாதிபதி
தம்மிடம் உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.