Monday, October 14, 2013

சிசேரியன் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு ஏற்படும் பக்க‍ விளைவுகளும், பின் விளைவுகளும்!

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்தையே சிறந்ததாக சொல் கின்றனர். ஏனெனில் சுகப் பிரசவ த்தின்போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்ப தாலேயே.

ஆனால் உண்மையில் சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்தின்போ து அவ்வளவாக வலி தெரியாவிட் டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவது ம் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்க வில்லை. சிசே ரியன் மூலம் நடக்கும் பிரசவத் தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின்னர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவ ம் என்றாலேயே வயிற்றை கிழித் து குழந்தையை வெளியே எடுப்ப து. அவ்வாறு சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கும்பொ ழுது வயிற்றில் ஏற்படும் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும்.

அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவ யிற்றில் சிசேரியன்செய்யும்போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது அறு வைசிகிச்சை வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

சுகப்பிரவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவ சியம். வேலை செல்லும் பெண்க ளுக்கு இது மிகவும் பிரச்சனையாகி விடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது.

பொதுவாகவே தசையில் ஏதேனும் கடு மையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந் த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒரு வித புடைப்பானது உண்டாகும். குறிப் பாக சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவ த்திற்கு பின்னர் இந்த மாதிரியான குடலி றக்கம் ஏற்படும்.

அதிலும் சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்திற்கு பின்னர் சரியான ஓய்வு எடுக்காவிட்டால் இறு தியில் குடலிறக்கத்திற்கு உள் ளாகக்கூடும். சிசேரியன் செய் த பின்னர் அடிக்கடி கடுமை யான முதுகு வலியானது ஏற் படும்.

அதிலும் சிசேரியன் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழு த்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.(VV)
Disqus Comments