Thursday, October 31, 2013

தீபாவளி: எண்ணெய்ச் சட்டியில் விழுந்த சமையற்காரர் பரிதாப மரணம்!

மேட்டூர்: திருமண மண்டபம் ஒன்றில் தீபாவளி பலகாரங்கள் சமைக்க வைக்கப்பட்டிருந்த கொதிநிலை எண்ணெய்ச் சட்டியில் கால் தவறி விழுந்த சமையற்காரர் உடல் வெந்து பரிதாபமாகப் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கரடிக்கொல்லம்பட்டியைச்  சேர்ந்த 30 வயது ஞானவேல் என்ற சமையற்காரர் திருமண மண்டபத்தில், இரு நாட்களுக்கு முன், சமையற்குழுவினருள் ஒருவராகப் பணி புரிந்த போது, சமையல் பொருட்களை எடுக்கப் போய், தரையில் சிந்தியிருந்த எண்ணெய் வழுக்கி, அருகிலிருந்த எண்ணெய்ச் சட்டியில் தவறி விழுந்துள்ளார்.

அலறித் துடித்த ஞானவேல், மருத்துவத்தின் பொருட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் மருத்துவம் பலனின்றி, ஞானவேல் நேற்று காலை பரிதாபமாக மரணத்தை தழுவினார்.  இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Disqus Comments