Tuesday, October 15, 2013

முதலமைச்சா் தயசிரி புத்தளத்துக்கான முதல் விஜயம் மதுரங்குளி நகருக்கு

(TM) புத்தளம், மதுரங்குளியில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையமும், பொது வசதிகள் நிலையமும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டதுடன், பாலர் பாடசாலைக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

வடமேல் மாகாண சபையினால், தகவல் மையத்துக்காக சுமார் 60 மில்லியனும், புதிய பாலர் பாடசாலை கட்டிடத்திற்காக சுமார் 15 இலட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, பிரதியமைச்சர் விக்டர் அன்டனி, மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.



Disqus Comments