சச்சின் டெண்டுல்கரைப் போன்று தானும் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்
அரங்கில் நீடிப்பேன் என இந்திய அணியின் இளம் அதிரடி துடுப்பாட்ட வீரர்
விராட் ஹோலி தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சச்சினைப்
போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்ற நம்பிக்கை
உள்ளது. அவரது வயதை எட்டும் போது (தற்போது சச்சினின் வயது 40) நானும்
தொடர்ந்து உடல்தகுதியுடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை
வயதிலும் அவர் உடல்தகுதியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
இதேவேளை,
நான் இதுவரை எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் தென்னாபிரிக்காவின்
வேகப்பந்து வீச்சாளர்களாக டேல் ஸ்ரெய்ன், மோர்னே மோர்கல் ஆகியோர் மிகவும்
அபாயகரமானவர்கள். அத்துடன் வெளிநாட்டு வீரர்களில் மேற்கிந்தியத்தீவுகளின்
கிறிஸ் கெய்ல் எனக்கு மிகவும் பிடித்த வீரராக உள்ளார் என அவர்
தெரிவித்தார்.