Friday, October 4, 2013

புலமைப் பரிசிலில் சித்தியடைந்த ஒரேயொரு கடையாமோட்டை முஸ்லிம் வித்தியாலய மாணவி

கடந்த 1ம் திகதி வெளியான புலமைப் பரிசில் பரிட்சை முடிவுகளின் படி கடையாமோட்டை முஸ்லிம் வித்தியாலய மாணவி செல்வி S.D. அப்ரா அமல் 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முன்னால் நவோதயா பாடசாலையும் தற்போதைய ஆயிரம் பாடசாலைத்திட்ட பாடசாலையுமாகிய கடையாமோட்டை முஸ்லிம் வித்தியாலயத்தில் இம்முறை 84 மாணவா்கள் பரிட்சைக்குத் தோற்றி இருந்தனா். தோற்றிய மாணவா்கள் குறித்த மாணவி மட்டுமே சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடையாமோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவா் சேகு தாவூத் அவா்களின் புதல்வியாவா் என்பது குறிப்பிடத்தக்கது.
(எமது ரெட்பானா செய்திகள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.)
Disqus Comments