மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரது மனைவி அவரை அடித்துக் கொன்றுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் நிவித்திகல, வத்துப்பிட்டிவல எனுமிடத்தில் ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரான குறித்த பெண்ணை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். 38 வயதான கெ.மஹிந்த அபேரத்ன என்பவரே தனது மனைவியால் அடித்துக் கொல்லப்பட்டவர் ஆவார்.
கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகநபரின் கணவன் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார் என்று அந்த பெண் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
பிள்ளைகள் முன்னிலையில் அவரது கொடுமையை தாங்க முடியாத நிலைமையில் வீட்டின் பின் புறத்திலிருந்த இரும்புக் கோலை எடுத்துவந்து தன் கணவனை அடித்துக் கொன்றதாக இந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.
சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணை முடிந்துள்ள நிலையில் சந்தேகநபரை நிவித்திகல நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் நிவித்திகல, வத்துப்பிட்டிவல எனுமிடத்தில் ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரான குறித்த பெண்ணை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். 38 வயதான கெ.மஹிந்த அபேரத்ன என்பவரே தனது மனைவியால் அடித்துக் கொல்லப்பட்டவர் ஆவார்.
கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகநபரின் கணவன் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார் என்று அந்த பெண் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
பிள்ளைகள் முன்னிலையில் அவரது கொடுமையை தாங்க முடியாத நிலைமையில் வீட்டின் பின் புறத்திலிருந்த இரும்புக் கோலை எடுத்துவந்து தன் கணவனை அடித்துக் கொன்றதாக இந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.
சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணை முடிந்துள்ள நிலையில் சந்தேகநபரை நிவித்திகல நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.