Tuesday, November 5, 2013

கணவன், மனைவி இருவருக்கும் மரண தண்டனை

ஹெரோயின் கடத்தி வந்து விற்றார்கள் என்று குற்றம் காணப்பட்ட கணவனுக்கும் மனைவிக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் நடைபெற்ற விசாரணையின் பின்னரே தம்பதியான பரீதி அன்ரன் மற்றும் இந்திராணி குணசேகர ஆகியோருக்கே கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்தது.

இந்த தம்பதியினர் மீது 34.32 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக 2000 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குற்றம் சாட்டப்பட்டது.

எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி வழக்கு தொடருநர் குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளனர் என கூறிய நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Disqus Comments