இந்தியாவின் உத்தர பிரதேசத்தின், லக்னோவிலிருந்து 90 கிலோ மீற்றர்
தொலைவிலுள்ள சிதாபூரில் உள்ள அதாரியா எனும் பகுதியில் இந்தியா
விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில்
பயணம் செய்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.
பரெய்லியிலிருந்து அலஹதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த
ஹெலிகொப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விவசாய நிலப்பகுதி ஒன்றில்
வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஹெலிகொப்டர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதியுயர் தொழில்நுட்ப ஹெலிகொப்டராகும்.