தானியங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பொருட்களுக்கான விசேட தீர்வை குறைக்கப்பட்டுள்ளது.
தீர்வை தொடர்பான புதிய திருத்தங்கள் நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் மைசூர் பருப்பிற்கான தீர்வை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
பட்டாணி கடலைக்கான தீர்வை 7 ரூபாவினாலும், பாசிப் பயிறுக்கான தீர்வை 32 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு
தானிய செய்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை தீர்வையை
குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு
குறிப்பிட்டது.