Tuesday, July 22, 2014

மு.கா.உயர் மட்டக்குழு சவூதியில் அரபு நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

உம்ரா செய்­வ­தற்­காக சவூதி அரே­பியா சென்­றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உயர் மட்­டக்­கு­ழு­வினர் சில அரபு நாடு­களின் முக்­கி­யஸ்­தர்­களையும் இஸ்லாமிய ஒற்றுமைக்கான அமைப்பின் பிரதிநிதிகளை யும் சந்­தித்து இலங்கை முஸ்­லிம் ­களின் பிரச்­சி­னைகள் குறித்து விப­ரித்துவரு­வ­தாக நம்­ப­க­மாக தெரிய வரு­கின்­றது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், கட்­சியின் பிர­திச்­செ­ய­லாளர் நாய­கமும் கல்­முனை மாந­கர முதல்­வ­ரு­மான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர்,கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னரும் சபையின் மு.கா.குழுத்­த­லை­வரும் கட்­சியின் சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­திப்­ப­ணிப்­பா­ள­ரு­மான ஏ.எம்.ஜெமில், சிரேஷ்ட சட்­டத்த்­த­ர­ணியும் மு.கா. சர்­வ­தேச விவ­கார பணிப்­பா­ள­ரு­மான ஏ.எம். பாயிஸ் ஆகி­யோரே புனித உம்ரா செய்­வ­தற்­காக கடந்த சனிக்­கி­ழமை சவூதி அரே­பியா பய­ண­மா­கி­யி­ருக்­கி­றார்கள்.
 
இவர்கள் சவூதி அரே­பி­யாவில் தங்­கி­யி­ருக்கும் காலப்­ப­கு­தியில் சில அரபு நாடு­களின் முக்­கி­யஸ்­தர்­க­ளையும் பொது அமைப்­புக்­களின் பிரதி நிதி­க­ளையும் சந்­திப்­ப­தற்­கான ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக தகவல் அறிந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
 
இதன்­பி­ர­காரம் கடந்த மூன்று நாட்­களில் சில முக்­கி­யஸ்­தர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்கள் நடந்து முடிந்­துள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.
இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பெளத்த பேரினவாத நெருக்கடிகள் குறித்து இதன்போது அவர்களுக்கு விபரிக்கப்பட்டிருப்பதாக அத்தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
Disqus Comments