Saturday, February 28, 2015

இந்த அரசாங்கம் அரசியல்வாதிகளின் மனைவி பிள்ளைகளையும் பழிவாங்குகிறது - மஹிந்த

இந்த அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களது மனைவிமார்கள் மற்றும் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹஜந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் இவ்வாறு கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான குரோத அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஸீ வீரவங்சவை சுகம் விசாரிப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று திரும்பும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த குரோத அரசியல் தவறானது. தான் அதிகாரத்தில் இருந்த போது எவரையும் இவ்வாறு பழிவாங்கவில்லை. அவ்வாறு  நான் செய்ததாக ஒருவராலும் கூற முடியாது. எனினும் அனேகமானோர் மீது இவ்வாறு என்னால் குற்றம் சுமத்த முடியும்.  சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொண்டு போலி குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி இவ்வாறு நடந்து கொள்வது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Disqus Comments