Saturday, February 28, 2015

முந்தல் பொலிஸ் நிலைய இரு பொலிஸார் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டடிருந்து சந்தேக நபர் ஒருவரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முச்சக்கர வண்டியொன்றில் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அழைத்துச் சென்று கொண்டிருந்து போது குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்தே சந்தேக நபரைத் தப்பிக்க விட்ட இவ்விரு பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடிக் கைது செய்ய முந்தல் பொலிஸார் விஷேட தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments