அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று முன்தினம் நாடு
திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி
முன்வைத்துள்ள தம்மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று
முன்னாள பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக் ஷ
தெரிவித்துள்ளார்.
வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணி குறித்த தகவல்கள்
தம்மிடம் உள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டால்,
அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக
இருப்பதாகவும், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி
கூறியிருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே பொலிஸ் திணைக்களத்தில்
இருந்து வெளியேறி விட்ட அவர், ஒருவேளை மீண்டும் அதில் இணைய விரும்பலாம்.
எவ்வாறாயினும், இது தற்போது நடந்து வரும் எமது பெயரைக் கெடுக்கும்
பரப்புரையின் ஒரு பகுதியாகும் என்றும் கோத்தபாய ராஜபக் ஷ
தெரிவித்துள்ளார். (நன்றி - வீரகேசரி)