கொழும்பு தேசிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவும் நேற்று மாலை சென்று பார்வையிட்டனர்.
இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியா ஷசி வீரவங்ச, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் நேற்று (27) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, 15ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையில் விடுவிக்கப்பட்டார்.