Wednesday, June 3, 2015

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற பொது அணி ஒன்றில் போட்டியிட தயார் - KAB

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்துக்கான சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதியை வென்றெடுக்க நமது சமூகங்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பாக இருக்கின்ற சகல வேட்பாளர்களும் பொது அணி ஒன்றில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வெற்றிபெற செய்ய, அவ்வாறான பொது அணி ஒன்றில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நமது மக்களின் நீண்ட கால பாராளுமன்ற பிரதிநிதிக்கான போராட்டத்தை வெற்றியடைய செய்ய ஏனைய அரசியல் தலைமைகள், இயக்கங்கள், குழுக்கள் ஆகியோருக்கும் பொது அணி ஒன்றில் போட்டியிட முன்வருமாறு அழைப்புவிடுக்கின்றோம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்வருமாறு புத்தளம் மாவட்ட / பிரதேச உலமா சபை, புத்தளம் பெரியபள்ளிவாயல் உட்பட ஏனைய பள்ளிவாசல்களின் தர்மகர்த்தாக்கள், கல்வியியலாளர்கள், இளைஞர் மற்றும் மாதர் அணிகள் ஆகியவற்றுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

கட்சி மற்றும் சுய நலன்களுக்கு அப்பால் நாம் எடுத்திருக்கின்ற இந்த முடிவை பயன்படுத்தி நமது சமூகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த விரும்பும் அனைத்து நல்லிதயங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
அன்புடன்,
கே.ஏ. பாயிஸ்.

(மேற்படி கருத்துகளை அனைத்தும் KAB அவா்களின் முகநூல் பக்கதில் இருந்து பெறப்பட்டது)
Disqus Comments