Monday, July 6, 2015

வீட்டுக்கு ஒரு வாக்கை பொதுபலசேனாவுக்கு - BBS தோ்தல் பிரச்சாரம் ஆரம்பம்.

2015ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலில் இறங்கியுள்ள பொது பலசேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன இலங்கை  வாழ் பௌத்தா்களிடம் வீட்டுக்கு ஒரு வாக்கை மாத்திரம் தாருங்கள் என்ற தொனியில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. 

 தமது அரசியல் நுழைவை நியாயப்படும் வகையில் நாட்டுக்காக  சிந்திக்கும் தலைவா்கள் இப்போது இல்லை என தெரிவிக்கும் குறித்த பௌத்த அமைப்பு தாம் 2025ம் ஆண்டு இலங்கையின் அரசியலை “தீா்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கப்போவது உறுதி" என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments