Monday, July 6, 2015

இரு பாடசாலை நண்பா்கள். நீதிபதியாகவும், குற்றவாளியாகவும் நீதிமன்றத்தில் சந்திப்பு - வீடியோ இணைப்பு

பாடசாலையில் நண்பர்களாக இருந்த இருவர் நீண்டகாலத்தின் பின்னர் நேற்று சந்தித்துக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பல்ல. நமது தமிழ் சினிமா பாணியில்… ஒருவர் நீதிபதியாகவும், மற்றவர் குற்றவாளியாகவும் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகர நீதிமன்றம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழக்கு விசாரணை நடைபெற்றபோது திருடனாக இருந்த தனது முன்னாள் நண்பனை அடையாளம் கண்டுகொண்ட பெண் நீதிபதி தாங்கள் முன்னர் படித்த பாடசாலையின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு படிக்கச் சென்றீரா என்று கேட்டபோது, நீதிபதி தனது நண்பி என்பதை அறிந்து கொண்ட திருடன் உடைந்துபோய் பெரிதாக அழத்தொடங்கினான்.

அப்போது அந்த நீதிபதி ‘உம்மை இந்த இடத்தில் காண்பதற்கு வருத்தம் அடைகிறேன். உமக்கு என்ன நடந்தது என்று நினைத்துப்பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார். அத்துடன், பாடசாலையிலே அவர் மிகச் சிறந்த ஒரு மாணவனாக இருந்ததாக குறிப்பிட்டு அவரைப்பற்றிய நல்ல விடயங்களை கூறினார்.

பின்னர், தனது நண்பனைப் பார்த்து ‘உமது பிழைகளைத் திருத்தி நல்ல முறையில் வாழ்வீர் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

திருடன் 43,000 டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.

Disqus Comments