புத்தளத்தில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கையொன்றை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
புத்தளம் – தலுசேனபொல பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப் படையின் 15 உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மணல் ஏற்றிச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சுற்றிவளைப்பின்போது அருகால் பயணித்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 50 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.