Wednesday, July 15, 2015

ஜனாதிபதி மைத்திரி அநாதையாகிவிட்டார் - பரிதாபப்படும் ஞானசாரர்

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதீயில் அனாதையாகியுள்ளார் என பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சிங்களவர்கள் பல்வேறு கட்சிகளுக்கு பிளவடைந்துள்ளமையினால் தீவிரவாத குழுக்கள் அதன் ஊடாக பிரதிபலன்களை பெற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இம்முறை தேர்தலின் போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Disqus Comments