முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திடீரென நேற்றிரவு பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க நாட்டை விட்டு சென்றுள்ளதாக அவருடைய ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அவர் நாடு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.