Tuesday, October 20, 2015

"ஒன்பது மாத காலப் பகுதிக்குள் 2200 பேர் விபத்தினால் உயிரிழப்பு"

2015 ஆம் ஆண்டின் முதல் 09 மாத காலப்­ப­கு­திக்குள் 2,200 பேர் வீதி விபத்துக்களால் உயி­ரி­ழந்­துள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது.
2014 ஆம் ஆண்டு வீதி விபத்­துக்­களால் 36,050 பேர் காய­ம­டைந்த நிலையில் அவர்­களுள் 2,440 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
வீதி விபத்­துக்­களால் உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­ரிக்­கின்­றமை கவ­னித்துப் பார்க்க வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும். எனவே வீதி விபத்­துக்­களை குறைத்து அதன் மூலம் உயி­ரி­ழப்­புக்­களை குறைக்க உட­னடி நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்­துள்ளார்.
வீதி விபத்­துக்­களை குறைக்க வேண்­டு­மாயின் அது தொடர்பில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வை ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அத்­துடன் வீதிப் பாது­காப்பு தொடர்பில் புதிய சட்ட திட்­டங்­க­ளையும் அமு­லுக்கு கொண்டு வர­வேண்டும் வீதி பாது­காப்பு தொடர்பில் புதிய தேசிய கொள்­கையை அமுல்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். இதற்கென நீண்ட கால திட்டமொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Disqus Comments