குருவிட - படதொட பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் படதொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
(அத தெரண தமிழ்)
