Monday, February 26, 2018

சிரியா மக்களுக்காக பொருளாதார ரீதியில் உதவ ஆசைப்படுகிறீர்களா? இதைச் செய்யுங்கள் - பகிருங்கள்

சிரியாவில் நடக்கும் மனிதப் படுகொலை அவலங்கள் தற்போது அனைவரையும், நிலை குழை வைத்துள்ளன. கிளர்ச்சியாளர்களைக் தாக்குகிறோம் என்ற பெயரில் அரசுப்படைகள், மேற்கொள்ளும் தாக்குதல்களாகல் எதுவும் அறியாத பச்சிளம் பாலகன்களின் சிதறும் உடல்கள் கண்ணில் நீர் மல்க வைக்கின்றன. 

தூரத்தில் உள்ள எம்மால் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியும் இல்லை. என்றாலும் பொருளாதார ரீதியில் உதவி செய்ய எமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கத்தார் செரிட்டி (Qatar Charity நிறுவனம். 

கத்தாரை மையமாகக் கொண்டு இயங்கும் கத்தார் செரிட்டி நிறுவனம், சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியைச் சேகரித்து வழங்குகின்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த திட்டத்துக்கு தங்களது பங்களிப்பை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஆன்லைன் இணைப்பை பயன்படுத்தி எம்மால் பணத்தை வழங்க முடியும். ,  இதற்கு எம்மிடம் CREDIT CARD, அல்லது DEBIT CARD இருக்க வேண்டும். குறைந்தது 1 றியால் முதல் எத்தனை றியால்களும் வழங்க முடியும். 

ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியாதவர்கள்( கத்தாரில் தற்போது இருந்தால்), கத்தாரில் உள்ள பிரபலமான அனைத்து சூபர்மார்க்கட்டுகளிலும், கத்தார் செரிட்டியின் பிரதிநிதிகள் விற்கும் டிக்கட்டுக்களை வாங்குவதன் மூலமும் உதவிகளை வழங்க முடியும். 


முடிந்தவர்கள் தவறாமல் உதவுங்கள். மற்றவர்களுக்கு தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள்



Disqus Comments